உடனடிச்செய்திகள்

Latest Post

Friday, October 8, 2021

இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை! பெ.மணியரசன் அறிக்கை!



இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில்
தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை!

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ.மணியரசன் அறிக்கை!

இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் கூடுதலாக உள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னை அருள்மிகு கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரி இன்று (8.10.2021) செய்தி ஏடுகளில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பி.காம்.(B.Com.), பி.சி.ஏ.(B.C.A.), பி.பி.ஏ.(B.B.A.), பி.எஸ்.சி.(B.Sc.) கணிப்பொறிப் படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்படுள்ளது. 

அதில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் படிப்புகளுக்கான வகுப்புகள் இல்லை.  ஒரு வேளை இவ்விரு தலைப்புகளில் பட்டப் படிப்பு படிக்க மாணவர்கள் சேர மாட்டார்கள் என்று அரசு கருதி இப்படிப்புகள் சேர்க்கப்படவில்லையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. 

அவ்வாறு மாணவர்களிடையே இவ்விரு பட்டங்களுக்கான ஆர்வம் இல்லை என்றாலும், அவர்களை ஆர்வப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. கூடுதல் உதவித் தொகை – பணி அமர்த்தத்தில் இப்படிப்புப் படித்தோர்க்கு சிறப்பு முன்னுரிமைகள் போன்ற ஊக்கங்களை அளித்து – அவற்றை அறிவித்துதான் விண்ணப்பங்கள் கோர வேண்டும்.

அடுத்து இப்பொழுது விண்ணப்பங்கள் கோரப்படுள்ள பட்டப் படிப்புகளில் தமிழ்ப் பயிற்று மொழி உண்டா என்ற விவரமும் விளம்பரத்தில் இல்லை. தமிழ்ப் பயிற்று மொழிப் பாடப் படிப்புகள் கட்டாயத் தேவை. தமிழ்ப் பயிற்று மொழிவழி படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் தமிழ்நாடு அரசு 20 விழுக்காடு ஒதுக்கியுள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்து அறநிலையத் துறையின் சார்பில் இயங்குகின்ற மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்களும், தமிழ்ப் பயிற்று மொழி ஏற்பாடும் வேண்டும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Thursday, October 7, 2021

"தமிழ் இந்து யார்?" 'எம்தமிழ்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ் இந்து யார்?" 


'எம்தமிழ்' ஊடகத்துக்கு.. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, October 5, 2021

"தமிழ் இந்து வேறு - ஆரிய இந்து வேறு!" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ் இந்து வேறு - ஆரிய இந்து வேறு!"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

வெளியாரை வெளியேற்றும் திரிபுரா! ஐயா பெ. மணியரசன் வாழ்த்துரை!

வெளியாரை வெளியேற்றும் திரிபுரா!


தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் வாழ்த்துரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, October 1, 2021

வள்ளலாரின் “தன்னை அறிதல்!” ஐயா பெ. மணியரசன் உரை!

வள்ளலாரின் “தன்னை அறிதல்!” 


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, September 29, 2021

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"தமிழ் இந்து? ஆரிய இந்து?" மூன்று மாதங்களுக்கு முன்பே சிறப்பான விளக்கமளித்து விவாதங்களைத் தொடங்கி வைத்த. ஐயா பெ. மணியரசன் அவர்கள்!

"தமிழ் இந்து? ஆரிய இந்து?"



மூன்று மாதங்களுக்கு முன்பே சிறப்பான விளக்கமளித்து விவாதங்களைத் தொடங்கி வைத்த...

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்கள்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, September 27, 2021

"தமிழ் இந்து தேவையா? ஆரியம் மீண்டும் வராதா?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ் இந்து தேவையா? 

ஆரியம் மீண்டும் வராதா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, September 26, 2021

மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்! ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும்  அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!


உழவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் தீங்கிழைக்கும் வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, கடந்த 2020 ஆகத்து மாதம் தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையிலும், புதுதில்லியில் பஞ்சாப் – அரியானா உழவர்கள் பெருந்திரளாக முற்றுகைப் போராட்டத்தை தற்போது வரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடும் பனி – வெயில் – மழை எனப் பொருட்படுத்தாமல் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, இரவு பகலாக அங்கேயே தங்கி உழவர்கள் நடத்திவரும் போராட்டத்தை உலகமே உற்று நோக்கி வருகின்றது. 

இந்நிலையில், மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், உழவர்களுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றித் தொழிலாளர் உரிமைப் பறிக்கும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும், தனியார்மயம் – தாராளமயம் என்ற பெயரில் மக்களின் பொதுச் சொத்துகளை – இயற்கை வளங்களை பெருங்குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது, பெட்ரோல் டீசல் மற்றும் எரிவளி உருளை விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (27.09.2021) அனைத்திந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த “அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” அழைப்பு விடுத்துள்ளது. 

காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநில அரசுகளும் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன.  

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவில் இணைந்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கைகளும் ஆகும். எனவே,  நாளை (27.09.2021) நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, September 25, 2021

சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்,



சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என நரேந்திர மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதமாகக் கூறிவிட்டது. 

மராட்டிய மாநில அரசு மற்றும் சிலர் தொடுத்திருந்த வழக்கில் 23.09.2021இல் இவ்வாறு கூறிய இந்திய அரசு, “இந்தியாவில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள், துணை சாதிகள், சாதிக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றுள் பட்டியல் சமூகத்தினரைத் தவிர பிறரைக் கணக்கெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. அதுமட்டுமின்றி, சாதியற்ற சமூகம் படைக்கும் இலட்சியத்திற்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியல் மாநில அரசுகளால் உருவாக்கப்படுவதாலும், கிட்டத்தட்ட ஒரே ஒலிப்புள்ள சாதிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளில் இருப்பதாலும், பட்டியல் சாதியினர் சிலர் மதம் மாறுவதால்  சமூகநிலை மாற்றங்கள் நிகழ்வதாலும் - இவ்வாறு கணக்கிடுவது சாத்தியமற்றது” என்று காரணம் கூறி இருக்கிறது. 

ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே ஏற்கத்தக்கதல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பது சாத்தியமானதுதான் என்பதற்கான விளக்கமளித்து இந்திய அரசின் “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே” கூட கடந்த 2021 சனவரியில் அறிக்கை அளித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தியது. 

வேடிக்கை என்னவென்றால், “இந்துத்துவ” பா.ச.க. மேற்கொண்ட இதே நிலைப்பாட்டைத்தான் “மதச்சார்பற்ற” காங்கிரசுக் ஆட்சியும் இதற்கு முன் மேற்கொண்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மட்டுமின்றி, மன்மோகன் சிங் ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரசுத் தலைவர்கள் பலர் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தினர். அப்போது, அன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஒரு சொல்லும் மாறாமல் பா.ச.க.வின் இதே மறுப்பைத்தான் நாடாளுமன்றததில் தெரிவித்தார். அது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய “சமூக - பொருளியல் - சாதிவாரிக் கணக்கெடுப்பு” (Socio - Econmic - Caste Census) மேற்கொள்ள முடிவானது. அதற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கி ஆய்வுக்குழுவை அமைத்தது. அதன் முடிவுகள் அரசிடம் முன்வைக்கப்பட்ட பின்பு, இந்திய ஆட்சியில் கட்சி மாற்றம் ஏற்பட்டது. 

நரேந்திர மோடி அரசு, இந்த ஆய்வறிக்கையில் சமூக, பொருளியல் விவரங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பகுதியை மீளாய்வு செய்ய அன்றைய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பங்காரியா தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை நிறுவியது. அதன் ஆய்வுமுடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆயினும், பங்காரியா குழுவின் ஆய்வறிக்கையை மேலாய்வு செய்த ஊரக மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை 2016 ஆகத்து இறுதியில் மக்களவை தலைவரிடம் வழங்கியது. அதில், “சமூக, பொருளியல், சாதிவாரிக் கணக்கெடுப்பு 98.87 விழுக்காடு மிகச்சரியாக இருக்கிறது. காணப்படும் சிற்சில குறைபாடுகளை நாங்கள் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கி விடலாம்” என்று கூறியது. 

உண்மை இவ்வாறிருக்க, 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என மோடி அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல! ஒருவேளை, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்குமானால் ஏற்கெனவே செய்ததுபோல் தனியாக ஆய்வுக்குழு அமர்த்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். 

சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக திட்டமிட முடியும். பல்வேறு படிநிலைகளில் ஏற்றத்தாழ்வாக உள்ள சாதிகளிடையே உள்ள உண்மையான சிக்கல்களை தீர்த்தால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அதுதான் சாதி ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாகும்! 

ஆனால், 2010லிருந்தே பா.ச.க.வின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. அதற்கான உண்மையான காரணம் - சாதி ஒழிப்பு நோக்கமோ, நடைமுறைச் சிக்கலோ அல்ல! பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உண்மையான தொகை தெரியுமானால், இப்போதுள்ள 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீடிக்க முடியாது என்றும், ஆதிக்கசாதியினருக்கான 10 விழுக்காடும் அடிபட்டுப் போகும் என்றும் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது. 

இன்னொருபுறம், தாராளமயப் பொருளியலின் சந்தை விதிகள் அனைத்துச் சாதியினருக்கும் சம வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற பொய்யும் அம்பலப்பட்டுவிடும் என்று தாராளமயவாதிகள் அஞ்சுகிறார்கள். 

மோடி அரசின் உள்நோக்கமுள்ள இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களும், இந்தியா முழுவதுமுள்ள சனநாயக ஆற்றல்களும் வலுவாக மறுக்க வேண்டும்! ஏற்கெனவே எடப்பாடி அரசு அறிவித்த தமிழ்நாடு அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க. அரசு விரைந்து முடிக்க வேண்டும்! இச்சிக்கலில் ஒத்த கருத்துள்ள பல்வேறு மாநில அரசுகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்திந்திய அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மோடி அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பா.ச.க. தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2021 அக்டோபர் இதழின் ஆசிரியவுரையாக எழுதியது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழ்நாட்டு வேலை தொழில் வணிகம் தமிழர்களுக்கே! தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம் ! ஐயா பெ.மணியரசன் அழைப்பு!

தமிழ்நாட்டு வேலை தொழில் வணிகம் தமிழர்களுக்கே! தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம் !



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் அழைப்பு! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT